எயிட்ஸ் விழிப்புணர்வு

Saturday, January 1, 2011

கருச்சிதைவுகள் நிறைந்து விட்ட நிலையில்; பாலியல் தொற்று எப்படி இருக்கும்

கருச்சிதைவுகள் இருக்குமென்றால் பாதுகாப்பான உடலுறவா நடக்கிறது. என்று மனதில் கேள்விஎழத்தான் வேணடும் இன்னும்கருவறைகள் கல்லறை யாகிப்போண நிலையில்கட்டாயமாகவே எழும் என்பதில் ஜயமில்லை… கருச்சிதைவு பற்றி பத்திரிகைகளிலும் சமூகத்திலும் மிகவும் அதிகமாகNவு பேசப்படுகின்றன. அதாவது மிகைப்படுத்தி அல்ல. உண்மையில் அவை அதிகரித்துவிட்ட நிலையை தான் குறிப்பிடுகின்றன. 
     கருச்சிதைவுகள் நிறைந்துவிட்டன என்றால் என்ன உண்மை…. முன்னைய காலங்களில் தான் புராணங்களில் கண்ணால் பார்த்தால் கர்ப்பக் கொள்ளும் கதைகள் இருக்கின்றன. அவ்வாறு நாம் இப்போதும் கருத முடியாது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. பாலியலை மையப்படுத்தியே தொலைக்காட்சி விளம்பரங்கள் தொடக்கம் அலைபேசிக்காணொளி …செல்போன்…. வரை வந்துவிட்ட நிலையில் இனம் வயதினரை உணர்விழக்கச் செய்யும் விதமாகவே இவை யாவும் நகர்கின்றன.

     இது இவ்வாறிருக்க பாலியல் நோய்கள் தொடர்பாக அறிந்து கொள்ள முடிவதில்லை. இங்கு உள்ள குறையாதென்றால் பாலியல் என்ற வரையறையில் தான் பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல் காணப்படுகின்றது. பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல தொடர்பான கருத்துக்களை; மக்கள் அறியவில்லை ஆனால் சமூகத்தில் போதுமான அளவு பாலியல் சிந்தனை பரவியே உள்ளது. இங்கு; பாலியல் ரீதியாக பரவும் நோயின் நோயியல் பற்றிய அறிவு மிகவும் பூச்சியம் என்றே கூறவேண்டியுள்ளது. பாலியல் நோய்த்தொற்று என்பது பாதுகாப்பான உடலுறவில் குறைக்கப்படுகின்றது. ஆணுறைகள், பெண் உறைகள் போன்றவற்றின் பயன்பாடும் சரியான பாவனை முறையும் அதிகமாணவர்கள் அறியாத நிலையிலேயே…. உள்ளனர் என்ற எண்ணமே இங்கு உருவாகின்றது.

     இவ்வாறான சாதனங்களை அவற்றை பயன்படுத்தும் உரியமுறையில் அல்லாமல் சாதாரணமாக  பயன்படுத்தும் போது கர்ப்பம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம். இவ்வற்றின் நம்பகத்தன்மை என்பன இங்கு செல்வாக்கு செலுத்துகின்றன இவை பயன்படத்தும் கிழிதல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மிகையளவு இனப்பெருக்கச் சுரப்புக்கள் ஏற்படும் போது இவற்றினைத் தாண்டி  நோய்க்கிருமிகள் மற்றும் விந்தனுக்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதைவிட சிலவகை தயாரிப்பு மாதிரியூடாக ர்ஐஏ கிருமி கடந்து செல்லும் தகவும் உள்ளது.

     இவ்வாறு பாதுகாப்பு உறைகளிலுள்ளேயே எத்தனை பாதுகாப்பின்மை இருக்கிறது என்றால் கருச்சிதைவுகள் வழமையாகிவிட்டன மறுதலையாக பார்க்கும்போது கர்ப்பம் தரிக்கப்பட்டுள்ளது. இன்னும் வெளிப்படையாக கூறுவதனால் பாதுகாப்பற்ற உடலுறவே நடைபெற்றுள்ளது.

     எனவே நமது சமூகத்தில் தற்போது எல்லா வசதி வாய்ப்புக்களும் அதிகரித்து விட்டன. (எயிட்ஸ் கிருமிவரை) கலாச்சார சீரழிவுகள் மலிந்துவிட்டன. இந்த நிலையில் பாலியல் நோய்க்கான இனம்காணல் துரிதப்பட வேண்டும். அதாவது ஓர் சமூகத்தில் தொற்றுநோய் பற்றி பார்த்தால் பனிக்கட்டி ஒன்று நீரில் அமிழ்ந்து மிதக்கும் போது பார்பப்pன் பெரும்பகுதி நீரில் அமிழ்நது காணப்படும் ;இவ்வாரே நோய் இனம் காணப்படும் மக்கள் கூட்டம் நீரின் மேல் வெளிக்காணப்படும் பகுதியாகவும் இனம் காணப்படாத மக்கள் கூட்டம் நீரில் அமிழ்ந்து காணப்படும் பகுதியாகவும் தான் ஒப்பிடமுடியும்
     எனவே நோய் தொடர்பான இனம் காணல் மிக முக்கியமாக உள்ளது. இது மிகவும் உயிர்த்துடிப்புடன் அமையவும் வேண்டும். இனம் காணப்படும் போது தரவுகள் எதுவும் வெளியிடப்படமாட்டா. இரகசியமாகவே பேணப்படும். இனம் காணப்பட தவறும் பட்சத்தில், ஒருவரால் பலர் தொற்றுக் ஆளாவதும் இன்னும் தாதியர், ஆய்வுகூட பரிசோதகர்கள், சத்திர கிகிச்சை மருத்துவர்கள் போன்ற பலரும் எயிட்ஸ் நோயாளியை கையாளும் போது தாம் எடுத்துக் கொள்ளும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து தவறி சாதாரண நோயாளிகள் உடன் மேற்கொள்ளும் நடைமுறையை கையாளப்படும் போது இவர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு ..குருதிமாற்றீடு மற்றும் ஏனைய தொற்றல் ஏற்படக்கூடிய முறைகளின் ஊடாகவும் அனேகர் தொற்றுக்கு ஆளாதலை தவிர்க்க இது பெரிதும் உதவும்.

No comments:

Post a Comment